“தீட்டு” என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.
இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய உண்மைத் தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.
தீட்டு என்பது என்ன?
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!
தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
பெண்கள் மாதவிடாயும் தீட்டு,
இறந்தாலும் தீட்டு!
இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே!
தீட்டால் உருவான இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்?
சிந்தித்துப் பாருங்கள்.
இவற்றில் சில மட்டுமே நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, உடல் நலம் பேணுவதற்கு சொல்லப்பட்டவை மற்றபடி தீட்டென்பது இவையல்ல
தீட்டு என்பது வேறு அவை,
✴காமம்,
✴குரோதம்,
✴லோபம்,
✴மதம்,
✴மாற்சரியம்
என்னும் பஞ்சமா பாதங்கள்!
காமத் தீட்டு:
காம விவகாரங்களில் அதிகமான பற்று கொண்டு சகட்டு மேனிக்கு நடந்து கொள்வது.
காம இச்சையின் மீதான பற்று அதிகமாகி பாலியல் ஒழுக்கம் தவறுவது
நம் உள்ளத்தில் எந்த நேரமும், காமம் சார்ந்த எண்ணங்களியே திளைப்பது.
அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்பது.
குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம்.
யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.
சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள்.
கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன.
ஆயுளும் குறைந்து விடுகிறது.
கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.
லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம்.
பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும்,
இரக்கம் என்பதே இல்லாமலும்,சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும்
எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும்,
தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும்,
வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணம்
இவையே லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.
மதத் தீட்டு:
மத வெறி என்பது பெரும் கர்வம் மாற்று மதத்தாரை மதிக்காது மனதில் எப்போதும் பகை உணர்ச்சி கொள்ளச் செய்வது.
மத வெறியால் மாற்று மதம் சார்ந்த யாவரையும் துன்பப் படுத்த சிறிதும் தயங்காது
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?
இதனால் தான் மத வெறிக்கு அடிமை ஆகாதே என்பர்.
மதத்தின் பெயரால் வெறி கொள்வது
மாற்சரியத் தீட்டு:
மாற்சரியம் என்பது பொறாமை.
பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது.
எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம்.
பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள்.
தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலாவது
இவைகள் தான் நீக்கப்பட வேண்டிய மிக முக்கியமான தீட்டுகளாகும்.
4 Comments for “தீட்டு என்றால் என்ன?”