நமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களில் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் பித்ருக்களாவர். அவர்கள் ஒளி பொருந்திய சூட்சும தேகமுடையவர்கள். அவர்களை எப்போது வழிபடவேண்டும் என பார்ப்போம்.சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை என்றும், சூரியனை பிதுர் காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் அழைககப்படுகிறது.
எனவே சூரியனும், சந்திரனும் நமது முன்னோர்களின் வழிபாடு தெய்வங்களாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், இரண்டு மாதங்களில் வரும் ஆதாவது ஆடி, தை அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வரும் மாவாசயைன்று இந்துக்கள் தனது முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம்.
ஆடி மற்றும் தை அமாவாசையின் தர்ப்பணம் செய்தால் முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும் என பெரியவர்களால் கூறப்படுகிறது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம். அதாவது அர்த்தஜாமம், காலைப்பொழுது பூஜைக்கு உகந்தது என்பதால் காலை முதலே விரதத்தை துவக்குகின்றனர்.
ஏன் முன்னோர்களை வழிபடவேண்டும் ?
நமது வாழ்வில் தினமும் எதாவது ஒரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது. தெரிந்து செய்யும் பாவங்கள் என்று அவை நீண்டு கொண்டே போகின்றனவே தவிர குறைவதில்லை.
5 Comments for “ஆடி அம்மாவாசை”